பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு பறிபோனது 3 லட்ச ரூபாய்!
திசையன்விளை: திசையன்விளையில் கீழே கிடந்த 10 ரூபாயை எடுத்த ஆசிரியரின் 3 ரூபாய் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திசையன்விளை அருகேயுள்ள மூடவன்குளத்தை சேர்ந்தவர் பெருமாள். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் காலை பைக்கில் மனைவி லட்சுமி மற்றும் பேரனுடன் திசையன்விளை மெயின் பஜாரில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு வந்தார்.
அங்கு நகை அடகு வைத்து ரூபாய் 2 லட்சத்து 59 ஆயிரம் பெற்றார். மேலும் மற்றொரு வங்கியில் உள்ள நகையை திரும்புவதற்காக வீட்டிலிருந்து ரூபாய் 56 ஆயிரம் கொண்டு வந்திருந்தார்.
மொத்தம் ரூபாய் 3 லட்சத்து 15 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து கொண்டு வங்கியிலிருந்து அவர் வெளியே வந்தார். அப்போது வங்கி முன்பு 10 ரூபாய் நோட்டு கீழே கிடந்தது.
அங்கு நின்ற ஒருவர் உங்கள் பணம் கீழே கிடக்கிறது என்று கூறவே பெருமாள் தன்னிடம் இருந்த கைப்பையை பைக் சீட்டில் வைத்து விட்டு கீழே குனிந்து நோட்டை எடுத்தார். அப்போது பைக்கில் இருந்த ரூபாய் 3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் அங்குள்ளவர்களுடன் கொள்ளையர்களை தேடினார்.
ஆனால் அதற்குள் அந்த நபர் மாயமாகி விட்டார். திருட்டு போன பணப்பையி்ல் வங்கி பாஸ் புக், ஏடிஎம் கார்டும் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் ரத்னராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications