கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு எங்கிருந்து வந்தது? விஜயபாஸ்கர் மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை
அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணிநேரமாக விசாரணை நடத்தினர்.அப்போது கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது? என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் பறி்முதல் செய்யப்பட்ட ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் தொடர்பாக சம்மன் அனுப்பிய நிலையில் அவரது மனைவி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 8 மணிநேரமாக விசாரணை நடைபெற்றது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளில் ஏப்.7,8 ஆகிய தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விஜயபாஸ்கரின் வீட்டில் ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து மேற்கண்ட மூவருக்கும் வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பினர். அதன் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விஜயபாஸ்கரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.89 கோடி ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த அவரது மனைவி ரம்யாவை நேற்று மாலை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். எனினும் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் அவர் திடீரென ஆஜரானார். அவரிடம் சுமார் 8 மணிநேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications