காவிரி வாரியத்திற்காக கடலில் இறங்கும் போராட்டம்... திருவொற்றியூரில் மஜக நூதன எதிர்ப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடல் மார்க்கமாக சென்று துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூரில் இருந்து கடல் வழியாக துறைமுகத்தை அடைந்து முற்றுகையிடும் நூதன போராட்டத்தை அறிவித்திருந்ததால் முன்எச்சரிக்கையாக போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் 50க்கும் மேற்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒண்டிக்குப்பம் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக துறைமுகத்தை அடைந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.

கடலில் இறங்கும் போராட்டத்தை தடுக்கும் விதமாக அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும், மத்திய அரசு பாகுபாடு காட்டக் கூடாது என்பன உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் இனியும் மத்திய அரசு அலட்சியம் காட்டினால் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications