காஷ்மீர் சுயாட்சி விவகாரம்- பேயை கற்பனை செய்து கொண்டு தாக்கும் பிரதமர் மோடி: ப.சிதம்பரம் பாய்ச்சல்
காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் தம்முடைய கருத்தை முழுமையாக படிக்காமல் ஒரு பேயை கற்பனை செய்து கொண்டு தாக்குகிரார் பிரதமர் நரேந்திர மோடி என சாடியுள்ளார் ப.சிதம்பரம்.
சென்னை: ஜம்மு காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் தம்முடைய கருத்தை முழுமையாக படிக்காமல் ஒரு பேயை கற்பனை செய்து கொண்டு தாக்குகிரார் பிரதமர் நரேந்திர மோடி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் எனில் கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு எந்த எந்த வகைகளில் முழுமையான தன்னாட்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டும் என கூறியிருந்தார்.

காங்கிரஸ் ஒதுங்கியது
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் இது ப.சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து என ஒதுங்கிக் கொண்டது.

ஜேட்லி, ஸ்மிருதி இரானி எதிர்ப்பு
மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ஸ்மிருதி இரானி ஆகியோர் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடியும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மோடிக்கு சிதம்பரம் பதில்
பிரதமர் மோடியின் கண்டனத்துக்கு ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது: ராஜ்கோட்டில் சனிக்கிழமையன்று நான் பேசியதை முழுமையாக படிக்காமல் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். என்னுடைய கருத்துகளை விமர்சிப்பவர்கள் முதலில் நான் கூறியதை படிக்க வேண்டும்.

மோடிக்கு சிதம்பரம் கண்டனம்
அந்த கருத்தில் எது தவறு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். பிரதமர் மோடி ஒரு பேயை கற்பனையாக சித்தரித்துக் கொண்டு தாக்குகிறார். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications