காஷ்மீர் சுயாட்சி விவகாரம்- பேயை கற்பனை செய்து கொண்டு தாக்கும் பிரதமர் மோடி: ப.சிதம்பரம் பாய்ச்சல்
காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் தம்முடைய கருத்தை முழுமையாக படிக்காமல் ஒரு பேயை கற்பனை செய்து கொண்டு தாக்குகிரார் பிரதமர் நரேந்திர மோடி என சாடியுள்ளார் ப.சிதம்பரம்.
சென்னை: ஜம்மு காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் தம்முடைய கருத்தை முழுமையாக படிக்காமல் ஒரு பேயை கற்பனை செய்து கொண்டு தாக்குகிரார் பிரதமர் நரேந்திர மோடி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் எனில் கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு எந்த எந்த வகைகளில் முழுமையான தன்னாட்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டும் என கூறியிருந்தார்.

காங்கிரஸ் ஒதுங்கியது
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் இது ப.சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து என ஒதுங்கிக் கொண்டது.

ஜேட்லி, ஸ்மிருதி இரானி எதிர்ப்பு
மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ஸ்மிருதி இரானி ஆகியோர் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடியும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மோடிக்கு சிதம்பரம் பதில்
பிரதமர் மோடியின் கண்டனத்துக்கு ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது: ராஜ்கோட்டில் சனிக்கிழமையன்று நான் பேசியதை முழுமையாக படிக்காமல் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். என்னுடைய கருத்துகளை விமர்சிப்பவர்கள் முதலில் நான் கூறியதை படிக்க வேண்டும்.

மோடிக்கு சிதம்பரம் கண்டனம்
அந்த கருத்தில் எது தவறு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். பிரதமர் மோடி ஒரு பேயை கற்பனையாக சித்தரித்துக் கொண்டு தாக்குகிறார். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications