காஷ்மீர் சுயாட்சி விவகாரம்- பேயை கற்பனை செய்து கொண்டு தாக்கும் பிரதமர் மோடி: ப.சிதம்பரம் பாய்ச்சல்
காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் தம்முடைய கருத்தை முழுமையாக படிக்காமல் ஒரு பேயை கற்பனை செய்து கொண்டு தாக்குகிரார் பிரதமர் நரேந்திர மோடி என சாடியுள்ளார் ப.சிதம்பரம்.
சென்னை: ஜம்மு காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் தம்முடைய கருத்தை முழுமையாக படிக்காமல் ஒரு பேயை கற்பனை செய்து கொண்டு தாக்குகிரார் பிரதமர் நரேந்திர மோடி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் எனில் கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு எந்த எந்த வகைகளில் முழுமையான தன்னாட்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டும் என கூறியிருந்தார்.

காங்கிரஸ் ஒதுங்கியது
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் இது ப.சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து என ஒதுங்கிக் கொண்டது.

ஜேட்லி, ஸ்மிருதி இரானி எதிர்ப்பு
மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ஸ்மிருதி இரானி ஆகியோர் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடியும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மோடிக்கு சிதம்பரம் பதில்
பிரதமர் மோடியின் கண்டனத்துக்கு ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது: ராஜ்கோட்டில் சனிக்கிழமையன்று நான் பேசியதை முழுமையாக படிக்காமல் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். என்னுடைய கருத்துகளை விமர்சிப்பவர்கள் முதலில் நான் கூறியதை படிக்க வேண்டும்.

மோடிக்கு சிதம்பரம் கண்டனம்
அந்த கருத்தில் எது தவறு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். பிரதமர் மோடி ஒரு பேயை கற்பனையாக சித்தரித்துக் கொண்டு தாக்குகிறார். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications