வீணை மீட்டும் அப்துல் கலாமின் சிலையை திறந்து வைத்தார் மோடி
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தபோது அதன் உள்ளே இருந்த கலாமின் சிலையையும் திறந்து வைத்தார்.
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வீணை மீட்டும் வகையில் இருந்த கலாமின் சிலையை திறந்து வைத்தார்.
மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ரூ.15 கோடியில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமுக்காக மணி மண்டபம் அமைக்கப்பட்டது.

இதை திறந்து வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து மண்டபம் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த அவர், அப்துல் கலாம் மணிமண்டபம் இருக்கும் பேக்கரும்பை அடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கலாம் மணி மண்டபத்துக்கு எதிரே தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் மணி மண்டபத்தை திறந்து வைத்த மோடி உள்ளே சென்று பார்வையிட்டார். கலாம் வீணை மீட்டுவது போன்ற சிலையையும் திறந்து வைத்தார். மேலும் கலாமின் நினைவிடத்தில் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications