உண்மைகளை சொல்ல... முகம் சிவந்து கோபத்தின் உச்சத்துக்கு போன பிரியங்கா... 'நளினி' பரபர தகவல்!
வேலூர் சிறையில் ராஜிவ் காந்தி மகள் பிரியங்காவை சந்தித்தது குறித்து விவரித்திருக்கிறார் நளினி.
சென்னை: வேலூர் சிறையில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் பிரியங்கா காந்தி தம்மை சந்தித்த போது நடந்தது என்ன என்பது குறித்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தம்முடைய சுயசரிதை புத்தகத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற நூல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. நளினி அனுப்பிய தகவல்களை பத்திரிகையாளர் ஏகலைவன் தொகுத்துள்ளார்.
இந்த நூலில் பிரியங்கா காந்தியுடனான சந்திப்பு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதன் தொகுப்பு:

சாதாரண உறுப்பினர்...
பிரியங்கா காந்தியுடனான சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 2-ம் கட்ட தலைவர் முருகன் என்பதை மறுத்து அதற்கான விளக்கங்களை கூறினேன். புலிகளின் 2-ம் கட்ட தலைவராக இருந்திருந்தால் முருகன் எளிதாக இலங்கைக்கு திரும்பியிருக்க முடியும். ஆனால் சிபிஐ, அவர் இலங்கைக்கு செல்ல படகு கிடைக்காமல் வேதாரண்யத்தில் இருந்து காத்திருந்துவிட்டு திரும்பினார் என்கிறது. அப்படியானால் அவர் ஒரு சாதாரண உறுப்பினராகத்தான் இருந்திருக்கிறார்.

பேருந்தில் வெடிகுண்டு?
சென்னை பாரிமுனையில் இருந்து வெடிகுண்டை கட்டிக் கொண்டு பேருந்தில் சென்றதாக சிபிஐ சொல்கிறது. பேருந்தில் நின்று கொண்டு செல்லும்போது வெடிகுண்டு வெடித்துவிடும் என்ற முன்யோசனை எதுவும் இல்லாமலா செல்வார்கள்?

எங்களுக்கு தெரியாது...
சதிச் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு தெரிந்திருந்தால் நாங்கள் பதற்றத்துடன் இருந்திருப்போம்.. அன்றைய நாளில் என் அலுவலகத்தில் எனக்கு கூடுதலாக பணிநேரம் கொடுத்தனர். அதையும் கூட முடித்துக் கொடுத்துவிட்டுதான் வந்தேன்.

கடும்கோபத்தில் பிரியங்கா
இதையெல்லாம் பிரியங்கா காந்தி ஏற்றுக் கொண்டபோதும், ஒட்டுமொத்தமாக எல்லோருமே அப்பாவிகள் என்கிறீர்களா? நிரபராதிகள் என கூற வருகிறீர்களா? என முகம் சிவக்க கடுங்கோபத்துடன் கூறியபோது அதுதான் உண்மை என கூற முடியாமல் அமைதியாகிப் போனேன்.

ஏற்க முடியாத பிரியங்கா
ஏனெனில் சிபிஐ ஜோடிப்புகள், நீதிமன்ற தீர்ப்புகள் அப்படித்தான் இருந்தன... இந்த நாட்டின் மிகப் பெரிய தலைவரான தன்னுடைய தந்தையின் மரணத்துக்கு நியாயமான நீதி கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவராகவே பிரியங்கா இருந்தார்.. ஆனால் அவர் மனதில் நான் நிரபராதி என்பது பதிவாகி இருந்தது.

இவ்வாறு நளினி விவரிக்கிறார்..
இந்த புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். இந்த புத்தகம் பெரும் பரபரப்பை கிளப்பக் கூடும் என தெரிகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications