தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்ற நளினி வேலூர் சிறைக்கு திரும்பினார்
வேலூர்: சென்னையில் தந்தையின் ஈமச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் நளினி வேலூர் சிறைக்கு மீண்டும் திரும்பினார்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி. இவரது தந்தை சங்கரநாராயணன் கடந்த மாதம் 23-ந்தேதி இறந்தார். இவரது இறுதிச்சடங்கு சென்னையில் நடந்தது.
அதில் கலந்துகொள்ள நளினிக்கு 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது. இதன் பின்னர் 16-ம் நாள் ஈமசடங்குக்காக 3 நாள் பரோல் கோரியிருந்தார் நளினி. இதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மாலா, நளினிக்கு 24 மணிநேர பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சென்னை வந்தார் நளினி. இன்று தந்தை சங்கரநாராயணின் ஈமச்சடங்கில் அவர் கலந்து கொண்டார். பின்னர் மாலை 4 மணியளவில் வேலூர் சிறைக்கு நளினி திரும்பினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications