திருவண்ணாமலை பவளக்குன்று மலையில் நித்தி சீடர்கள் மீண்டும் பூஜை
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றே பவழக்குன்று மலையில் பூஜைகளைச் செய்வதாக நித்தியானந்தா சீடர்கள் புதுக் கதையை கூறியுள்ளனர்.
திருவண்ணாமலை : பவழக்குன்று மலையில் பூஜை செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி நித்தியானந்தா சீடர்கள் மீண்டும் பூஜை செய்யத் தொடங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் அருகே பழமை வாய்ந்த பவழக்குன்று மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்புகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பாக நித்தியானந்தாவின் சீடர்கள் மலையில் சுமார் 3 ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர்.
மலைப்பகுதிகளில் தென்னங்கீற்றுகளால் குடில் அமைத்து தங்கத் தொடங்கியவர்கள், இங்குள்ள மலை ஒன்றில் நித்தியானந்தா தவம் செய்து ஞானம் பெற்றதாகக் கூறி அங்கு வழிபாடுகளும் நடத்தத் தொடங்கினர். இதோடு அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் வரக்கூடாது என்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு
ஆக்கிரமிப்பு இடத்தில் கான்கிரீட் கொண்டு ஆசிரமம் உள்பட பல்வேறு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை செய்யவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப முள்வேலி அமைப்பதற்கான கம்பிகள், கற்கள் மலைக்கு கொண்டு வரப்பட்டன. இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் மலையில் முள்வேலி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விரட்டியடிப்பு
மலைப்பகுதியில் ஆசிரமம் கட்ட திட்டமிட்ட இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 18ம் தேதி பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நித்தியானந்தா சீடர்களை கற்களைக்கொண்டு வீசி அடித்து விரட்டியடித்தனர்.

உதவி ஆட்சியர் உத்தரவு
பொதுமக்கள் புகாரையடுத்து திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரவி மற்றும் போலீசார் பவழக்குன்று மலைக்கு சென்று அவர்கள் நித்தியானந்தாவின் சீடர்கள் அமைத்திருந்த ஆசிரமத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து சட்டத்திற்கு புறம்பாக போடப்பட்ட குடில்களை அகற்ற உத்தரவிட்டனர்.

சீடர்கள் வெளியேற்றம்
ஆசிரமத்திற்கு உள்ளே இருந்தவர்களை வெளியேற்றியதோடு, பெண் சீடர்களும் பெண் காவலர்களால் இழுத்து வெளியே அனுப்பப்பட்டனர். மேலும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

மீண்டும் பூஜை
இந்நிலையில் நித்தியானந்தா சீடர்கள் நேற்று முதல் மீண்டும் பவழக்குன்று மலையில் பூஜை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலைப்பகுதியில் மீண்டும் பூஜை செய்து வரும் நித்தி சீடர்கள் மாவட்ட நிர்வாகத்திட அனுமதி பெற்றே பூஜை செய்வதாக புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளனர்.

சர்ச்சை சாமியார் நித்தி
கடவுளின் ஞானம் பெற்றவர் என்று சொல்லிக்கொள்ளும் நித்தியானந்தா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த படுக்கையறைக் காட்சிகள் வெளியானதையடுத்து அவர் சர்ச்சையில் சிக்கினார்.

புதுக்கதை
தனது சீடர்களை வைத்து இடத்தை வளைத்து போட்டு ஆசிரமம் கட்டுவதில் பலே கில்லாடியானவர் என்று சமூக செயற்பாட்டாளர்கள் நித்தியானந்தா பற்றி புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகமே பவழக்குன்று மலையில் இருந்து நித்தி சீடர்களை எச்சரித்து அனுப்பிய நிலையில் தங்களிடம் பூஜை நடத்த அனுமதி இருப்பதாக சில காகிதங்களை காட்டுகின்றன, இதில் எது உண்மை என்பது அதிகாரிகள் ஆய்விற்குப் பின்னரே தெரிய வரும்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications