8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி ரத்து.. மாணவர் முதுகில் குத்துகிறார் மோடி… வேல்முருகன் கண்டனம்
எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி ரத்து என்று மாணவர் முதுகில் மோடி குத்துகிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்து மோடி மாணவர்களின் முதுகில் குத்தியுள்ளார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது கம்ப்யூட்டர் காலம். டிஜிட்டல் யுகம். ஆனால் மோடி நம்மைக் கற்காலத்திற்கே பின்னோக்கித் தள்ளப் பார்க்கிறார்.

மோடிக்கு மட்டும் டிஜிட்டல்
இத்தனைக்கும் டிஜிட்டல் என்று பேசிக் கொண்டிருக்கும் மோடிக்கு ஏன் இந்தப் பிற்போக்கு எண்ணம் என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? அது, எல்லோரும் கற்றுவிட்டால் மோடி மாத்திரம் டிஜிட்டல் என்று பேசிக் கொண்டிருக்க முடியாது தானே?

பெரும்பான்மை மக்கள் கல்வி மறுப்பு
அதனால்தான் குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர்த்து, இந்த "தேசமாய்" விளங்கும் 90 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெரும்பான்மை மக்கள் கல்வி கற்று விடக்கூடாது என்று பார்க்கிறார் மோடி. இந்த கெட்ட எண்ணத்தில்தான் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய நடுவண் அமைச்சரவை கூட்டம், தற்போது நடைமுறையில் இருக்கும் எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்ய ஒப்புதலளித்திருக்கிறது.

பாசிச நடவடிக்கை
இது அனைவருக்கும் கல்வி என்ற ஜனநாயக நடைமுறையை ஒழித்துக்கட்டும் பாசிச நடவடிக்கையாகும்.
முதலில் "கல்வி", "கற்றல்" ஆகிய சொற்களின் பொருள் என்ன என்பதுதான் கேள்வி! கல்வி என்பது திரட்சியான, முழுமையான ஒரு பொருளன்று; அது வரையறையற்றது, முடிவற்றது. அதைக் கற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும்; கற்று முடித்தாகிவிட்டது என்று சொல்ல முடியாது.
கற்பது, கற்றுக் கொண்டேயிருப்பதுதான் கல்வி! ஆக, கற்க வாய்ப்பளிப்பதுதான் வேண்டியதே தவிர, தேர்வின் மூலம் மேற்கொண்டு கற்க தகுதியுடையவர், தகுதியில்லாதவர் என்று பிரிப்பது சரியல்ல.

துளிர்விடும் போதே கிள்ளி எறிதல்
மேலும் தொடக்கக் கல்வி நிலையிலேயே - மாணவர்கள் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி காலத்திலேயே, அதாவது துளிர் விடும்போதே அதனைக் கிள்ளியெறிவது போல் இருக்கிறது, தொடக்கக் கல்வியில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யும் மோடியின் முடிவு.
இது மக்கள் விரோத நடவடிக்கை, மாநில உரிமையைப் பறிக்கும் செயல்.

தமிழக அரசு ஏற்கக் கூடாது
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இதை வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இதைக் கைவிடக் கோருகிறது.
தமிழக அரசும் இதை ஏற்கக்கூடாது, எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications