என்னை யாராலும் அசைச்சுக்க முடியாது, அசைச்சுக்க முடியாது... விஜயகாந்த்
உளுந்தூர்ப்பேட்டை: மக்களுக்குப் பிரச்சினை என்றால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நான் இறங்கி விடுவே. எனக்கு யாரிடமும் பயம் கிடையாது. எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி என்னை அசைக்க முடியாது என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
உளுந்தூர்ப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆரியநத்தம், கிழக்கு மருதூர் உள்ளிட்ட கிராமங்களில் வேன் மூலமாக பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த்.

வழக்கம் போல காமெடி கலந்து அவர் பேசியதைக் கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்து ரசித்தது. அவரது பேச்சிலிருந்து:
நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். இந்த பூமி அனைத்தும் விவசாய பூமியாகும். ஆனால் இங்கு விவசாயம் சரியாக நடைபெறவில்லை. இங்குள்ள கிராமங்களில் சாலைகள் குண்டும்-குழியுமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இங்கு சரியான சாலை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. நான் வந்ததும், இங்கு தரமான சாலை அமைத்து தருவேன்.
இங்கு குடிநீர் தட்டுப்பாடும் அதிகமாக இருக்கிறது. என்னைப் பற்றி கேட்டுப் பாருங்கள், விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்தேன். அதேபோல் இங்கும் நான் வெற்றி பெற்று வந்ததும் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்க செய்து, குடிநீர் பஞ்சத்தை போக்குவேன். ஏரிகள் அனைத்தையும் தூர் வாருவேன்.
திருநாவலூர் ஒன்றியத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். நீங்கள் யாரையும் பார்த்தும் பயப்பட வேண்டாம். உங்களுக்காக நான் இருக்கிறேன். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து இந்த பகுதியை வளர்ச்சியடைய விடாமல் தடுத்து வருகிறார்கள்.
எந்த கொம்பனாலும் என்னை அசைக்க முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி பாடுபடுவேன். எனக்கு எதிரிகளே இல்லை. எனக்கு அதிமுக, திமுக, பாமக தொண்டர்கள் யாரும் எதிரிகள் கிடையாது. அவர்களது கட்சிகளின் தலைமையே எனக்கு எதிரிகள் ஆவர் என்றார் அவர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications