ஆங்கில புத்தாண்டு என்றாலே இதே வேலையா போச்சு.. சீறுகிறார் எச் ராஜா!
ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்திவிட்டு கலாட்டா செய்வது சகஜாமாகிவிட்டது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்திவிட்டு கலாட்டா செய்வது சகஜாமாகிவிட்டது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
நாளை நள்ளிரவுடன் 2017ஆம் ஆண்டு விடைபெற்று 2018 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. சென்னை உட்பட நாடு முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் என பல இடங்களில் நள்ளிரவில் புத்தாண்டு களைகட்டும். கோவில்களிலும் இரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

குடித்துவிட்டு கலாட்டா..
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு குறித்து எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் குடித்துவிட்டு வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகிவிட்டது என அவர் கூறியுள்ளார்.

காவல்துறை தடை
இதனால்தான் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் யாரும் புத்தாண்டு கொண்டாடக் கூடாது என காவல்துறை தடைவிதித்துள்ளது என்றும் அவர் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
|
கோவில்களை திறப்பது
மேலும் நள்ளிரவில் கோவில்களை திறந்து வைத்திருப்பது ஆகம விதி மீறல் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
|
பலரும் எதிர்ப்பு
எச் ராஜாவின் இந்த டிவிட்டுக்கு பலரும் அவரது பக்கத்தில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வழக்கமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பிரச்சனையில் சிக்கும் எச் ராஜா இம்முறை ஆங்கில புத்தாண்டை வம்பிழுத்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications