முடங்கிய தமிழக அரசு நிர்வாகம்- கடன் பாக்கி செலுத்தாததால் வல்லூரில் மின்உற்பத்தி கட்!!
தேசிய அனல் மின் கழகத்திற்கு கடன் பாக்கியை செலுத்தாததால் வல்லூர் அனல்மின் நிலையத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளுர் மாவட்டம் வல்லூர் அனல்மின்நிலையத்தில் மின்சாரம் வாங்கியதற்காக தேசிய அனல் மின் கழகத்தில் கடன் பாக்கியை செலுத்ததால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய அனல்மின் கழகமும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் இணைந்து தலா 50 சதவீதம் முதலீட்டில் தமிழ்நாடு எரிசக்தி நிறுவனம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் வல்லூரில் உள்ள அனல்மின்நிலையத்தில் 500 மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட 3 அலகுகள் மூலம் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பங்காக 1,065 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. மீதம் உள்ள மின்சாரம் தென்மாநிலங்களான ஆந்திரா, கேரளா உள்ளிட்டவற்றிற்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

நோட்டீஸ்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் 17-ந்தேதி வரை மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதன் மூலம் வல்லூர் அனல்மின்நிலையத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி செலுத்த வேண்டி உள்ளது. இந்த தொகையை வரும் 26-ந்தேதிக்குள் செலுத்துமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மின் உற்பத்தி நிறுத்தம்
தவறும் பட்சத்தில் 26-ந்தேதி நள்ளிரவு முதல் மின்சார வினியோகத்தை நிறுத்துவதாக கூறியிருந்தது. எனினும் கடன் பாக்கி திரும்ப செலுத்தப்படாததால் நேற்று நள்ளிரவு முதல் வல்லூர் அனல் மின் நிலைய 2 வது மற்றும் 3வது அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மின்வெட்டு அபாயம்
தமிழகத்தில் கோடை வெப்பம் உக்கிரமாக சுட்டெரித்து வரும் நிலையில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் வல்லூர் அனல்மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் வடசென்னை அனல் மின்நிலையத்திலும் கொதிகலன் பழுது, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி தடைபட்டுள்ளது. மின்உற்பத்தி நிறுத்தம் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிர்வாகத் திறமை இன்மை
4 மாதத்திற்கு முன்னரே நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியமும், தமிழக அரசு துரித கதியில் செயல்படாததால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது அரசின் நிர்வாகத்திறமின்மையை காட்டுவதாகவே அனைத்துத் தரப்பினரும் கருதுகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications