சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் அணி வழக்கு!
ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அந்த நேரத்தில் இக்கேள்விக்கு தக்க பதில் அளிப்பார் என்றார் மாஃபா பாண்டியராஜன்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் ஆவடி தொகுதி எம்.எல்.ஏவுமான மாஃபா பாண்டியராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி இதுதான்:
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி, செக்ஷன் 32கீழ், அடிப்படை உரிமைகள் என்ற ஷரத்தின்கீழ், வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
10 நாட்கள் நடந்த பல நிகழ்வுகள் , கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டது, சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது, மறைமுக வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உரிமை இருந்தும் அதை பயன்படுத்தாது, எண்ணற்ற விதிமுறைகள் மீறல் நடந்துள்ளது என அனைத்தையும் உள்ளடக்கி சுப்ரீம் கோர்ட்டை நாங்கள் அணுகியுள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

உண்மையான அதிமுக
உண்மையான அதிமுக என்பது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும். அவைத்தலைவராக மதுசூதனன் செயல்படுவார். இது சட்ட ரீதியான தீர்ப்பாகவும், தேர்தல் கமிஷன் மூலமாகவும் உறுதிப்படும்.

26 குற்றச்சாட்டுகள்
26 குற்றச்சாட்டுகள் அடிப்படையில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்தியாவின் பெரிய வழக்கறிஞர் வழக்கில் ஆஜராகிறார். எனவே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.

ஆர்.கே.நகர் தேர்தல்
ஆர்.கே.நகரில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவாரா என்ற நிருபரின் கேள்விக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதுகுறித்து கலந்து ஆலோசித்துக் கொண்டுள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அந்த நேரத்தில் இக்கேள்விக்கு தக்க பதில் அளிப்பார்.

தினகரன் யார்?
டி.டி.வி.தினகரன் அதிமுகவில் அமைத்த ஆட்சிமன்ற குழுவை நாங்கள் ஏற்கவில்லை. அவரை துணை பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையமே அங்கீகரிக்கவில்லை. எனவே நாங்களும் அவரை அங்கீகரிக்கவில்லை. விரைவில் நாங்கள் ஆட்சிமன்ற குழுவை முறைப்படி அறிவிப்போம். இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications