நல்லாண்டார்கொல்லையில் தீப்பிடித்த ஓஎன்ஜிசி தொட்டி.. மூடும் நடவடிக்கை தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை : நல்லாண்டார்கொல்லையில் தீப்பிடித்த ஓஎன்ஜிசி தொட்டியை மூடும் பணி தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில் நேற்று மாலை திடீரென ஓஎன்ஜிசி கழிவுத் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். திகுதிகுவென எரிந்த தீ கரும்புகைகளை கக்கியது. தீ விபத்து குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

Recommended Video

நல்லாண்டார்கொல்லை ஓஎன்ஜிசி கிணற்றில் தீ | Oneindia Tamil
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மக்களுக்கு இந்த தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் நல்லாண்டார்கொல்லையில் தீ விபத்து ஏற்பட்ட கிணற்றை மூடும் பணியில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications