3 மாதத்துக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்.. பொதுமக்கள் கிணற்றை பயன்படுத்த ஓபிஎஸ் ஒப்புதல்!
தனக்கு சொந்தமான கிணற்றில் 3 மாதங்களுக்கு பொதுமக்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேனி: தனக்கு சொந்தமான கிணற்றில் 3 மாதங்களுக்கு பொதுமக்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டத்தில் மெகா கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக கடந்த 20 நாட்களாக கிராம மக்கள் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பிரச்னைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக கிராம மக்களுடன் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேற்றிரவு தேனி சுற்றுலா மாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 40 ஏக்கர் நிலத்தை விற்க ஓ.பி.எஸ். முடிவு செய்ததாக தெரிகிறது. மேலும் அந்தக் கிணற்றையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்.
Recommended Video

இதற்காக 3 மாத கால அவகாசம் அவர் கேட்டுள்ளார். அந்த 3 மாதம் வரையும் கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஓபிஎஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கிராம மக்களிடம் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
லட்சுமிபுரம் மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஓ.பிஎஸ் தரப்பு இந்தத் தீர்வைத் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டுள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications