நலத்திட்டம் செயல்படுத்துவதாக ஏமாற்றி நிதி மோசடி... திருச்செந்தூர் அருகே பஞ்சாயத்து தலைவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அரசு நிதியை மோசடி செய்ததாக பஞ்சாயத்து தலைவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நங்கைமொழி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் உதயகுமார். இதே பஞ்சாயத்தில் துணை தலைவராக ஆணையூரை சேர்ந்த சித்ரலேகாவும், செயலாளராக கீதா என்பவரும் இருந்து வருகின்றனர். பஞ்சாயத்து மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் அனைத்திருக்கும் செலவு செய்யப்படும் பணம் இவர்கள் கட்டுபாட்டில்தான் இருக்கும்.

பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டங்களான சாலைகள் அமைப்பது, தெருவிளக்குகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் செய்தல் ஆகிய அனைத்து திட்டங்களுக்கும் அரசு அளிக்கும் நிதியை பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் உதயகுமார் பெற்று திட்டங்களுக்கு செலவிட முடியும். இதற்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியுடன் இவர்கள் சேர்ந்து கையெழுத்திட்டால் மட்டுமே வங்கியில் இருந்து பெற முடியும்.
இந்நிலையில், இந்த பஞ்சாயத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கலெக்டர் ரவிகுமாருக்கு தகவல் சென்றது. இதனால் கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, உடன்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்புலெட்சுமி தலைமையிலான அதிகாரிகள் நங்கைமொழி பஞ்சாயத்து கணக்குகளை தணிக்கை செய்தனர்.
இதில் கடந்த 2013 மே மாதம் முதல் தற்போது வரையில் ரூ.36 லட்சம் வரை மோசடியாக அரசு நிதி அபரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் போலி ஆவணங்கள் மூலமும், போலி கையெழுத்து போட்டும் பஞ்சாயத்து நிதியை வங்கியிடம் இருந்து பெற்று மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்புலெட்சுமி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார்.
இதையடுத்து, மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பஞ்சாயத்து தலைவர் உதயகுமார், துணை தலைவர் சித்ரலேகா, செயலாளர் கீதா ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இவர்களுக்கு வங்கியின் மேலாளர் உடந்தையாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த 3 பேரையும் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். வங்கி மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications