ஈழத் தமிழர்களுக்காகப் போராடியபோது உற்ற துணையாக இருந்தவர் பரதன்.. வேல்முருகன் புகழாரம்
சென்னை: ஏகாதிபத்திய, மதவாத சக்திகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயகக் குரல்களையும் ஓரணியில் திரட்டுவதில் பெருமுனைப்புடன் பணியாற்றிய பெரும் பண்பாளர் மறைந்த முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஏ.பி. பரதன் என்று தமிழக வாழ்வுரி்மைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
ஏ.பி. பரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
முதுபெரும் இடதுசாரித் தலைவரான மூத்த தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் மறைவு இந்திய ஜனநாயக சக்திகளுக்கு மாபெரும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

92 வயதான முதுபெரும் தோழர் ஏ.பி. பரதன் வங்கதேசத்தில் 1924ஆம் ஆண்டு பிறந்தவர்... இளம்வயதிலேயே இடதுசாரியாக திகழ்ந்தவர்.
வங்கதேசத்தில் இருந்து மராட்டிய மாநிலம் நாக்பூரில் குடியேறிய அவர் அத்தொகுதியில் இருந்து சட்டமேலவை மற்றும் நாடாளுமன்ற லோக்சபாத் தேர்தல்களை எதிர்கொண்டவர்.
மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியான தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் 1990ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலரான பின்னர் தேசிய அரசியலில் ஆழமான முத்திரை பதித்தவர். 1996ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலராக பதவி வகித்தவர்.
தமிழீழ இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட நேரத்தில் போராடிய நமக்கெல்லாம் உற்ற துணையாக இருந்தவர்.. அரசியல் பொதுவாழ்வில் முன்னுதாரணத்துடன் அப்பழுக்கற்ற மாமனிதராக திகழ்ந்தவர்.. ஏகாதிபத்திய, மதவாத சக்திகளுக்கு எதிரான அனைத்து ஜனநாயகக் குரல்களையும் ஓரணியில் திரட்டுவதில் பெருமுனைப்புடன் பணியாற்றிய பெரும் பண்பாளர்.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மதவாத சக்திகள் கைப்பற்றி கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில் நாடு தழுவிய அளவில் மதவாதத்துக்கு எதிரான சமூக நீதி சக்திகள் ஓரணியாக ஒன்று திரண்டு கொண்டிருக்கும் வேளையில் மாபெரும் தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மூத்த இடதுசாரித் தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆழ்ந்த இரங்கலையும் செம்மார்ந்த இறுதி வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications