ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முக்கிய ஆலோசனை வழங்கியவர் அனில் மாதவ் தவே!
டெல்லியில் இன்று காலமான மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதில் முக்கிய பங்காற்றினார்.
சென்னை : டெல்லியில் இன்று திடீரென காலமான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில்மாதவ் தவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை நிதானமாக கையாண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வித்திட்டவர்.
பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வந்த அனில் மாதவ் தவே கடந்த ஜுலை மாதம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்தத்துறையின் இணை அமைச்சராக இருந்த போதும் சுயமாக முடிவெடுக்கும் தனி சுதந்திரம் அனில் மாதவ் தவேவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்ற போது அதை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு திண்டாடிக் கொண்டிருந்தது. மேலும் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் கைபிசைந்து நின்றது மத்திய அரசு.
இந்த காலகட்டத்தில் மிகுந்த நிதானமாக செயல்பட்ட அமைச்சர் அனில் மாதவ் தவே ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த மாநில அரசு சட்டம் இயற்றினாலே போதும் என்ற கருத்தை பிரதமருக்கு எடுத்துச் சொல்லியதே இவர் தான் என்று சொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டு தடையின்றி நடத்த பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது பீட்டா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதாரங்கள் பெற்று வரும் இந்த அமைப்பு எப்போதுமே ஜல்லிக்கட்டுக்கு தடையாக உள்ளது, எனவே மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு பீட்டாவை தடை செய்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பை மத்திய அரசு கவனத்தில் கொண்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications