தூத்துக்குடியில் இருந்து விரைவில் பயணிகள் கப்பல்... துறைமுகம் இன்ப செய்தி!
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், கன்னியாகுமரிக்கு 3 மாதத்தில் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளதாக துறைமுகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு 3 மாதத்தில் சிறிய பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது என்று தூத்துக்குடி துறைமுக துணைத் தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் தக்ஷன் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் இருந்து ஆயிரம் சரக்கு பெட்டக கொள்ளவு கொண்ட புதிய பெரிய கப்பல் சேவையை துறைமுக துணைத்தலைவர் நட்ராஜன் இன்று துவக்கி வைத்தார். இந்த போக்குவரத்து தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வாரம் இருமுறை இயக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்ச்கிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துறைமுக துணைத் தலைவர் நட்ராஜன் கூறியதாவது: தூத்துக்குடி துறைமுகத்தின் கொள்ளவை அதிகப்படுத்த கடலை ஆழப்படுத்தும் திட்டத்தை செயல் படுத்த உள்ளோம். மைனஸ் 16 மீட்டர் ஆழப்படுத்த உள்ள இந்த பணிகள் மூன்று வருட காலத்தில் நிறைவடையும். இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு மிகப்பெரிய கப்பல்கள் வந்து செல்லும்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி ஆகிய இடக்களுக்கு சிறிய பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பயணிகள் கப்பல் இயக்க விருப்பம் உள்ளவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. பின்னர் விருப்பம் உள்ளவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி இற்கான செயல் திட்டம் வடிவமைக்கப்படும். மூன்று மாதத்தில் இந்த பயணிகள் சேவை துவங்கப்படும் என்றும் துறைமுக துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications