8 மாதமாக கூலி கொடுக்காத ஊராட்சி... சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!
நூறு நாள் வேலைத் திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை: அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்த கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாதமாக ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரத்திலுள்ள 12 ஊராட்சிகளில் தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளைச் செய்தனர். இவர்களுக்கு வாரம்தோறும் சம்பளப் பணம் வங்கியில் செலுத்தப்படும்.

அவர்களுக்கு கடந்த 2017 மார்ச் 31ம் தேதி வரை தினசரி ஊதியமாக ரூ.203ம், ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.205ம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு வாரந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
அதையடுத்து தொழிலாளர்கள், அயன்சிங்கப்பட்டி பஞ்சாயத்து அலுவலத்தை முற்றுகையிட்டனர்.மேலும் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அதன்பிறகு அவர்களிடம் அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளப் பணம் விரைவில் வங்கியில் சேர்க்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications