8 மாதமாக கூலி கொடுக்காத ஊராட்சி... சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!
நூறு நாள் வேலைத் திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை: அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்த கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாதமாக ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரத்திலுள்ள 12 ஊராட்சிகளில் தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளைச் செய்தனர். இவர்களுக்கு வாரம்தோறும் சம்பளப் பணம் வங்கியில் செலுத்தப்படும்.

அவர்களுக்கு கடந்த 2017 மார்ச் 31ம் தேதி வரை தினசரி ஊதியமாக ரூ.203ம், ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.205ம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு வாரந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
அதையடுத்து தொழிலாளர்கள், அயன்சிங்கப்பட்டி பஞ்சாயத்து அலுவலத்தை முற்றுகையிட்டனர்.மேலும் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அதன்பிறகு அவர்களிடம் அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளப் பணம் விரைவில் வங்கியில் சேர்க்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications