தேர்வில் தோல்வியால் மனகுழப்பமா? 104க்கு போன் செய்யுங்கள்!
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் முதன்மை பெற்றவர்கள், சாதனை படைத்தவர்கள் பற்றிதான் பெரும்பாலானவர்கள் பேசுகின்றனர்.
பெரும்பாலான மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர். 1150 க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளின் சிலர் கூட இன்னும் 20 அல்லது 30 மதிப்பெண்கள் எடுத்து இருக்கலாமே என்று நினைக்கிறார்கள். இது அவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த மன அழுத்தம் உடனே மாறி, மனம் வேறு விஷயங்களுக்கு சென்று விட்டால் பிரச்சினை இல்லை. மாறாக மன அழுத்தம் அதிகரிக்கும்பட்சத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலை போன்ற விரும்பத்தகாத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.
மதிப்பெண் குறைந்து விட்டது அல்லது தேர்வில் தோல்வி ஏற்பட்டு விட்டது என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது என்பது கோழைத்தனமான செயல். பெற்றெடுத்து வளர்த்து, இத்தனை நாளாக பாசம் காட்டிய பெற்றோர்களை காலமெல்லாம் கதற வைக்கும் இத்தகைய செயல்களில் மாணவ, மாணவிகள் ஈடுபடக்கூடாது என்பதற்காக தற்கொலையை தடுக்கும் பல அமைப்புகள் உள்ளன.
மன அழுத்தத்தில் உள்ளவர்களை ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் தமிழக அரசு 104 எனும் மருத்துவ உதவி சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி இந்த சேவையை தொடங்கி வைத்தார்.
104 சேவையை மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பயன்படுத்தலாம். அதாவது 104 என்ற போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினால், மன அழுத்தம் ஏற்பட்டுள்ள மாணவ , மாணவிகளுக்கு மன நல ஆலோசகர்கள் பல்வேறு ஆலோசனைகளை கொடுப்பார்கள். குறைவான மதிப்பெண் பெற்றதால் ஏற்பட்ட கவலையை அவர்கள் போக்கச் செய்வார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications