தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு எத்தனை கோடி ரூபாய் நிதி... கணக்கு சொன்ன மோடி!
தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு எத்தனை கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பட்டியலிட்டார்.
ராமேஸ்வரம் : அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் ஸ்மார்ட் நகரங்களுக்காக செய்துள்ள நிதியுதவி குறித்து பட்டியலிட்டார்.
தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு உதவியுள்ளது.சென்னை, கோவை, தஞ்சை உள்ளிட்ட நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக்கப்பட்டுள்ளன ஸ்மார்ட் சிட்டி நகரங்களை மேம்படுத்த ரூ.900 கோடி நிதி ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல மத்திய அரசாங்கம் 33 அம்ருத் நகரங்களை தேர்வு செய்து 4,700 கோடி நிதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு நகரத்திலும் மின்சாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும்.
ராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற 33 நகரங்களில் இடம்பெற்றுள்ளது. ஸ்மார்ட் நகரங்களில் மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மேம்படுத்தப்படும். கிராமங்களில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டுக்கும் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காக ரூ18,000 கோடியில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications