ஈவ்டீசிங் விவகாரம்: புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.20,000 அபராதம்!
புதுச்சேரி: மாணவிகளை ஈவ்டீசிங் செய்த வழக்கில் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டில் உள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் 6000க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். 90 சதவீதம் பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் புதுச்சேரியில் வந்து தங்கி படிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இரவு புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகளான வித்யா, காவியா ஆகியோர் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சில மாணவர்கள் ஈவ்டீசிங் செய்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் ராகிங் கமிட்டிக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் புகாரின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததுடன், மாணவிகளை ஆறு மாதம் கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்ததுடன், விடுதியை விட்டும் வெளியேற்றியது கல்லூரி நிர்வாகம்.
அதுமட்டுமல்லாமல், ஈவ் டீசிங் செய்ததாக சொல்லப்பட்ட மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படியில் பாதிப்புக்குள்ளான இரண்டு மாணவிகள் மீது வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மாணவிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாணவிகள் இடைநீக்கத்தை மட்டும் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, மாணவிகள் தரப்பில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரனையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ராமசுப்ரமணியம், மாணவிகளின் விவகாரத்தை சரியாக கையாளாத புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், மாணவிகள் விடுதியிலேயே தங்கவும், அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி மீண்டும் செமஸ்டர் தேர்வு எழுத வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்த விசாரணைக் குழுவை ரத்து செய்ததுடன், புதிதாக பல்கலைக்கழக மானியக் குழுவை (யூ.ஜி.சி.) அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications