கட்டாயப்படுத்தி டியூசன் சேர்த்தால் கடும் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களைக் கட்டாயப்படுத்தி தனிவகுப்பு நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"பள்ளிகளில் உயர் வகுப்புகளில் பயிலும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அவர்களிடம் கட்டணம் வசூலித்து தனி வகுப்பு நடத்துவதாக அரசுக்குப் புகார் வந்துள்ளது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி, இது போன்ற செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications