விவசாயிகள் ஆதரவு போராட்டத்தால் ஸ்தம்பித்த போக்குவரத்து.. மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவான இயக்குநர் கவுதமன் தலைமையிலான போராட்டத்தால், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
திடீரென நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை போலீசார், உளவுத்துறை என யாருமே கணிக்கவில்லை. போராட்டம் நடத்த தேர்ந்தெடுத்த இடம் முக்கியமான பகுதி என்பதால் அதன் தாக்கம் சென்னை நகரின் பல பகுதிகளிலும் எதிரொலித்தது.
இதனால்தான் காலை சுமார் 9.30 மணி முதல் சென்னை நகரம் முழுக்க முடங்கிப்போனது போல காட்சியளித்தது.

ஏர்போர்ட் சாலை
சென்னை கிண்டி, விமானநிலையம், வடபழனி சாலைகள் அனைத்தும் முடங்கிப்போயின. ஏர்போர்ட்டிலிருந்து விஐபிகள் சென்னைக்குள் வரும் பகுதி இது என்பதால் அவர்களும் தங்கள் அதிருப்தியை மேலிடத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

நுழைவாயில்
சென்னையில் நுழைவாயில் போன்ற பகுதி கிண்டி. ஆனால் இதன் வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியவில்லை, அதேபோல சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியவில்லை என்ற சூழல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது.

ஆபீஸ் செல்வோர்
இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்படைந்தனர். பூந்தமல்லி சாலை, அண்ணா சாலை வரை போக்குவரத்து பாதிப்பு தெரிந்தது. இதனால் அலுவலகம் செல்வோர் கடும் வெயிலில் கஷ்டப்பட்டனர்.

மெல்ல, மெல்ல இயல்புநிலை
விவசாயிகள் ஆதரவு போராட்டக்காரர்கள் கிண்டி மேம்பாலத்தில் போட்ட சங்கிலி, பூட்டை போலீசார் உடைத்து, கவுதமன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் சென்ற பிறகு, மெல்லமெல்ல போக்குவரத்து சீரடைந்தது. இதன்பிறகே நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications