9 வருடம் கழித்து போராட்டத்துக்காக கைது.. என்ன சொல்வது இந்த அரசை!
கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரை: கக்கூஸ்ஆவணப்பட இயக்குனர், சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதி மதுரை ஆணையூரில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
2009ல் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பங்கேற்றதால் திவ்யா கைது செய்யப்பட்டார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட திவ்யா அண்மையில் கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.
தீண்டாமை, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைக்கு எதிராக திவ்யா தொடர்ந்து போராடி வருகிறார். கைதுசெய்யப்பட்ட திவ்யபாரதியை ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திவ்ய பாராதியின் கைதுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் அடக்குமுறை பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Recommended Video
|
காரணமில்லாமல் கைது
அரசுக்கு எதிராக மக்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைத்து ஆர்வலர்களும் காரணமில்லாமல் கைது செய்யப்படுகின்றனர்.. என்கிறது இந்த டிவிட்
|
கேவலத்தின் ௨ச்சத்தில் ஏவல்
இன்னும் எத்தனை போராளிகளை கைது செய்வார்கள்.. 2009 க்கு இன்று நடவடிக்கை... கேவலத்தின் ௨ச்சத்தில் ஏவல்.. என்கிறது இந்த டிவிட்
|
கக்கூஸ் படம்
கக்கூஸ் படத்தை இப்போ தான் இந்த அதிகாரிங்க பாத்து இருப்பாங்க போல என கண்டிக்கிறது இந்த டிவீட்
|
என்ன சொல்வது அரசை?
9 வருடம் கழித்து போராட்டத்துக்காக கைது, என்ன சொல்வது இந்த அரசை எனக் கேட்கிறது இந்த டிவீட்