அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்கவேண்டும்.. அஸ்வினியின் தாயார் கதறல்
அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என அஸ்வினியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என அஸ்வினியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் ஆலபாக்கம் தனலட்சுமிநகரை சேர்ந்த சங்கரி தம்பதியின் மகள் அஸ்வினி. இவர் கே.கே நகரில் உள்ள மீனாட்சி கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தந்தை மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது தனது தாய் சங்கரியுடன் அஸ்வினி வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே அழகேசன் என்ற 24 வயது இளைஞர் வசித்து வந்தார்.

தண்ணீர்கேன் சப்ளை
இவர் சென்னை மாநகராட்சி 143வது வார்டில் சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும் வீடு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார். அஸ்வினியின் வீட்டிற்கும் அழகேசன் தான் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார்.

உயிருக்கு உயிராக காதல்
அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதற்கு அஸ்வினியின் தாயார் சங்கரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அஸ்வினியை ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைத்துள்ளார்.

கொலை செய்த அழகேசன்
இதைத்தொடர்ந்து அஸ்வினி அழகேசனின் காதலை முறித்துள்ளார். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் கல்லூரியில் இருந்து வெளியே வந்த அஸ்வினியை, கல்லூரிக்கு வெளியே காத்திருந்த அழகேசன் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

காவல்துறை பதிலளிக்கவேண்டும்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரவாயல் காவல்துறையினர் அஸ்வினி கொலை குறித்து பதிலளிக்க வேண்டும் என அஸ்வினியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் வரவேண்டும்
அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியும் பாதுகாப்பு அளிக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அழகேசனின் உறவினர்கள் இங்கு வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தண்டனை வழங்க வேண்டும்
அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்கவேண்டும் என்றும் இல்லையேல் அஸ்வினி உடலை வாங்க மாட்டோம் என்றும் அஸ்வினியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications