எம்.ஜி.ஆருக்கு தந்த 'பிராமிஸ்'.. சோழிங்கநல்லூரில் களமிறங்கும் சீக்கிய ஐஏஎஸ் அதிகாரி!
சென்னை: பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரது பெயர் உஜாகர் சிங்.
பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரிலிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கியாலி என்ற ஊரைச் சேர்ந்தவர் உஜாகர் சிங். இவர் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியிலிருந்து பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வட இந்தியர் ஒருவர் தமிழகத் தேரத்லில் போட்டியிடுவது என்பது அரிதிலும் வெகு அரிதானதாகும். இவர் அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைச் சேர்ந்தவராம்.
1977 பாட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் தமிழக கேடரில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடைசியாக அரசு டேட்டா சென்டரில் 2010ம் ஆண்டு சிறப்பு ஆணையராக இருந்து ஓய்வு பெற்றார்.
தான் போட்டியிடுவது குறித்து உஜாகர் சிங் கூறுகையில், ‘எனது கட்சியின் நலத் திட்டங்களான இலவசக் கல்வி என்னைக் கவர்ந்தது. அதனால்தான் நான் கட்சியில் இணைந்தேன். மேலும் கட்சித் தலைவர் தேவநாதனும் என்னை கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தார். அவர் ஒரு நல்ல தலைவர்' என்கிறார்.
தமிழகத்திலேய தொடர்ந்து தங்கியது ஏன் என்ற கேள்விக்கு தமிழர்கள் அன்பானவர்கள், இரக்க குணம் மிகுந்தவர்கள். அருமையானவர்கள், பெருந்தன்மையானவர்கள். பொறாமை இல்லாதவர்கள், ஈகோ பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களை நாட்டில் எங்குமே பார்க்க முடியாது. இதனால்தான் நான் தமிழகத்திலேயே தொடரந்து தங்கி விட்டேன் எனக் கூறுகிறார் உஜாகர்.
அதை விட அடுத்து தமிழகத்திலேயே தங்கி இருப்பதற்கு அவர் கூறும் காரணம்தான் மிக முக்கியமானது. அதாவது, "மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடன் நான் பழகியுள்ளேன். அவரிடம் நான் ஒரு வாக்குறுதி கொடுத்தேன். என்னைப் போன்ற அதிகாரிகள் ஓய்வுக்குப் பிறகு தமிழகத்திலேயே தங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் கூறுவார். அதை நான் இப்போது நிறைவேற்றுகிறேன்" என உஜாகர் தெரிவித்துள்ளார்.
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications