42 ஆண்டுகளுக்கு பின் ஜூலை 11 முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்!
சென்னை: 42 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த ரயில்வே ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. திட்டமிட்டபடி இப்போராட்டம் நடைபெற்றால் நாடு முழுவதும் பயணிகள் ரயில்சேவை, சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகும்.
நாட்டில் மக்களின் அன்றாட போக்குவரத்து வசதியில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமானது. இந்த துறை 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. 14 லட்சம் பேர் இத்துறையில் பணியாற்றுகின்றனர். நாடுமுழுவதும் தினமும் 2.36 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

8 மணிநேரம் வேலை, பொதுத் துறைக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1974-ம் ஆண்டு நாடுமுழுவதும் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான இந்த போராட்டம் 20 நாட்கள் நீடித்தது. இப்போராட்டத்தில் பல லட்சம் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்க நாடு முழுவதும் ரயில்சேவை முடங்கிப் போனது. பல்லாயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், அடிப்படை ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 11-ந் தேதியே வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக இந்த போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் ஒத்தி வைத்திருந்தன.
இந்நிலையில் எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண் ணையா, டிஆர்இயூ சங்கத்தின் பொதுசெயலாளர் எ.ஜானகிராமன், எஸ்ஆர்இஎஸ் சங்கத்தின் பொது செயலாளர் சூர்யபிரகாசம் ஆகியோரின் தலைமையில் தனித் தனியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கு நேற்று பேரணியாக வந்தனர். பின்னர் தொழிற்சங்கங்களின் மூத்த நிர்வாகிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரியிடம் வேலைநிறுத்தம் தொடர்பான நோட்டீஸ் வழங்கினர்.
ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி இப்போராட்டம் நடந்தால் 1974-ம் ஆண்டைப் போல நாடு முழுவதும் பயணிகள் ரயில்சேவை, சரக்கு போக்குவரத்து முற்றாக முடங்கும் நிலை உருவாகும்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications