யாராவது ஊட்டிக்குப் போற பிளான் இருக்கா.. கேன்சல் பண்ணிட்டு மெட்ராஸுக்கு வாங்க.. செமயா இருக்கு!
சென்னையில் காலை 9 மணிக்கே மாலை 6 மணி போல் இருள் சூழ்ந்துள்ளது.
Recommended Video

சென்னை: காலை 9 மணிக்கே மாலை 6 மணி போல் கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்துள்ளது. அடையாறு தரமணி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 27 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே தீவிரம் காட்டிய மழை பல சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கொட்டித் தீர்த்தது.
இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையில் உள்ள ஏரிகளும் நிரம்பியுள்ளன.

சென்னையில் மீண்டும் மழை
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ஓய்வெடுத்த வடகிழக்குப் பருவமழை இன்று மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது.

இருள் சூழ்ந்துள்ளது
சென்னை அடையாறு, தரமணி, திருவான்மியூர், அண்ணாநகர், புரசைவாக்கம், மேற்கு மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை போரூர், வளசரவாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் கருமேகம் திரண்டு இருள் சூழ்ந்துள்ளது.

புறநகரில் மேக மூட்டம்
கூடவே சில்லென காற்றும் வீசி வருகிறது. இதேபோல் பல்லாவரம், குரோம்பேட் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

மக்கள் மகிழ்ச்சி
சென்னையின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!












Click it and Unblock the Notifications