அந்த 2 கன்டிஷனை ஏற்றுக்கொண்டால் தான் பேச்சுவார்த்தை: பொன்னையன்
சென்னை: சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஓபிஎஸ் அணியின் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சசி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இந்நிலையில் சசி அணி இரண்டாக உடைந்துள்ளது. டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தாரை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.

டிடிவி தினகரனுக்கு வெறும் 8 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு தான் உள்ளது. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிகளும் ஒன்றாக சேர பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். தெரிவித்ததையடுத்து ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ஓ.பி.எஸ். அணியில் உள்ள பொன்னையன் கூறுகையில்,
2012ம் ஆண்டில் ஜெயலலிதா எப்படி செய்தாரோ அதே போன்று சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்த 2 நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications