சென்னை கலவரம்.. போலீஸ் தடியடி.. பிப். 8ல் விசாரணையை தொடங்குகிறது நீதிபதி ராஜேஷ்வரன் கமிஷன்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் முடிவில் வெடித்த கலவரம் குறித்த விசாரணை வரும் 8ம் தேதி தொடங்குகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் இந்த விசாரணையை மேற்கொள்ள இருக்கிறார்.
சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக பிப்ரவரி 8ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் விசாரணையை தொடங்க இருக்கிறார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது நடுகுப்பம் மீன் சந்தை மற்றும் குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை போலீசாரே கொளுத்தினார்கள்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இந்த வன்முறையில் வீட்டில் இருந்தவர்களை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்ததாகவும், வீடுகள் தாக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டினார்கள். இதுகுறித்து நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம், கடந்த 23ம் தேதி சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிக்கும். இந்த விசாரணை வரும் 8ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து வன்முறை குறித்து விசாரிக்க உள்ளார்.
அடுத்த வாரம் தொடங்கும் இந்த விசாரணை 3 மாதத்தில் முடிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications