வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என வருவாய் துறை பெயர் மாறியது- அரசாணை வெளியீடு
தமிழக வருவாய்துறையின் பெயர் இனி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என வருவாய்துறைக்கு பெயர் மாற்றம் செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அனைத்து அரசு துறைகளுக்கும் தாய்த் துறையாக திகழுவது வருவாய்த் துறையாகும். அனைத்து நிலங்களும் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.

நிலம் தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதும், நிலம் தொடர்பான ஆணைகளை வெளியிடுவதும், அரசு நிலங்களை பாதுகாப்பதும், நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதும் வருவாய்த் துறையின் முக்கிய கடமைகள் ஆகும்.
வருவாய்த் துறை செய்யும் பணியின் அடிப்படையில் 2002ஆம் ஆண்டிலிருந்து வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என அழைக்கப்படுகிறது.
வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை, நில நிர்வாக துறை, நில சீர்திருத்தத்துறை, நகர நில உச்சவரம்பு மற்றும் நகர நிலவரித்துறை மற்றும் நில அளவை துறை என 5 துறைகளை உள்ளடக்கியது.
கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி தாக்கிய பின்னர் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்கும் பணிகளில் வருவாய் துறை பேசப்பட்டது.
அதன் பின்னர் வருவாய் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முதல்வர் ஆவார். இந்த ஆணையம், பேரிடர் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்தது.
பெரும்பாலான மாநிலங்களில், வருவாய் துறையானது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்திலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என பெயர் மாற்றம் செய்து அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications