ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம் - பிரவீண் நாயர் நியமனம்
ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்த பத்மஜா தேவி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரவீண் நாயர் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்த பத்மஜா தேவி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரவீண் நாயரை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக பத்மஜா தேவி செயல்பட்டதாக திமுக அளித்த புகாரின் பேரிலேயே தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

தேர்தல் ஆணையரிடம் புகார்
திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் நேற்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியை சந்தித்து 3 கோரிக்கை மனுக்கள் தந்தனர். அந்த மனுவில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஏற்கனவே ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டார்.

பத்மஜா தேவி நியமனம்
தற்போது இந்த தொகுதியில் சசிகலா தலைமையிலான அதிமுக அணி சார்பில் டி.டி.வி. தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பிரச்னை தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை இணை இயக்குனர் பத்மஜா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுங்கட்சி அத்துமீறல்
பத்மஜா தேவி ஏற்கனவே கடந்த 2016ல் நடந்த பொது தேர்தலில் இதே தொகுதி தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர். தற்போதும் இவர் நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. தேர்தலின் போது கூறப்பட்ட ஆளும் கட்சியினர் அத்துமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்பதற்காக இவர் மீது புகார்கள் கூறப்பட்டன.

பணப்பட்டுவாடா
வாக்காளர்களுக்கான பணப் பட்டுவாடா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. எனவே நியாயமாக முறையாக தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே பத்மஜாவை தேர்தல் அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவித்து விட்டு அவருக்கு பதிலாக மத்திய அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

ஜார்ஜ் மீது புகார்
இதே போல ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் திமுக எம்பிக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பத்மஜா தேவி மாற்றம்
ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியின் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவியை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக பிரவீண் நாயரை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திமுகவினர் அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது ஆளும்கட்சித்தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்











Click it and Unblock the Notifications