ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தா?... பரவி வரும் வதந்தியால் மக்கள் குழப்பம்
நெல்லை: ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகி விடும் என தகவல் பரவி வருவதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இரண்டு கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2005ல் வழங்கப்பட்ட கார்டுகள் 2009ல் காலாவதியாகி விட்டது. இதற்கு உடனடியாக புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக உள்தாள் ஓட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2012ல் ரூ.300 கோடி செலவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை ஓழிக்க முடியும் என அரசு நம்பியது. இதற்காக கடந்த 2014ல் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் தனியார் வசம் ஓப்படைக்கப்பட்டது.
மேலும், ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு கண்ணின் கருவிழி, கை ரேகை பதிவு செய்து ஸ்மார்ட் கார்டு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஆதார் அட்டை பதிவில் பல்வேறு கோளாறுகள் இருப்பதால் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. மா்றாக தனியார் நிறுவனம் மூலம் புதிய மென் பொருள் தயாரிககப்படடு ஸ்மார்ட் கார்டு வழங்க தீர்மானித்தது.
இந்த நிலையில் உள் தாள் ஓ்ட்டிய ரேஷன் கார்டுகள் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. பல வருடமாக ஒரே கார்டைப் பயன்படுத்தி வருவதால், பலரின் கார்டுகள் கிழிந்து கந்தலாகி விட்டது. இதனால் நடப்பாணடில் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் மீண்டும் ஆதார் எணணை இணைத்து ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுளளது.
காஸ் சிலிண்டர், வாக்காளர பட்டியலில் ஆதார் எண் இணைப்பு பணி முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளன.
இந்த நிலையில் ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என தகவல் பரவி வருவதால் பொதுமக்கள் திகைப்பில் உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications