சங்கரராமன் கொலை- கூட்டுச் சதிக்கான ஆதாரம் இல்லாததால் அனைவரும் விடுதலை: தீர்ப்பில் நீதிபதி

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் இன்று புதுவை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மொத்தம் 25 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இவர்களில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆகிவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கதிரவன் படுகொலை செய்யப்பட்டார்.
இதையொட்டி 23 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி முருகன் தமது தீர்ப்பில், சங்கராச்சாரியார்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை. அத்துடன் சங்கரராமன் குடும்பத்தினரே கொலையாளிகளை அடையாளம் காட்டவும் தவறி பிறழ் சாட்சியாகிவிட்டனர்.
மேலும் அரசு முன்வைத்த சாட்சிகளில் 83 பேர் அரசுத் தரப்புக்கு ஒத்துழைப்பு தராமல் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளைக் கூட அரசு தரப்பு அடையாளம் காட்டவில்லை. வழக்கின் அதிகாரி சக்திவேல் சுதந்திரமாக விசாரணை நடத்தவில்லை. கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் அனைத்து பொருட்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
இதனாலே அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று அறிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications