நான் புதுவை நீதிபதியுடன் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது-ஜெயேந்திரர்

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர். அவர் மட்டுமல்லாமல் விஜயேந்திரர் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 5ம் தேதி நடக்கவிருந்தது. இந்த நிலையில் சுந்தரராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயேந்திரரும், நீதிபதி ராமசாமியும் தொலைபேசியில் பேசிக் கொண்ட விவரம் ஆடியோ மூலமாக வெளியாகியுள்ளது. அதில் பண பேரம் நடந்துள்ளதாக தெரிகிறது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து நேற்று நீதிபதி சுகுணா, சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
ஏற்கனவே பல அரசுத் தரப்பு சாட்சிகள் பல்டி அடித்து விட்டதால் இந்த வழக்கு பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தது.இந்த நிலையில் ஜெயேந்திரரும், நீதிபதியும் போனில் பேசியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஜெயேந்திரர் மறுத்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த ஆடியோ பொய்யானது. சங்கரராமன் வழக்குக்குப் பின்னர் நாங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவே கிடையாது. மேலும் நான் நீதிபதி ராமசாமியை ஒரே ஒருமுறைதான் பார்த்துள்ளேன். என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காக எனக்கு வேண்டாதவர்கள் செய்துள்ள சதிச் செயல் இது என்று அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications