ஊரை விட்டுப் போறேன் என்ற கமல் அரசியல் பேசுவது ஏன், ரஜினியிடம் கடவுள் பேசிட்டாரா?: சரத்குமார்
சேலம்: பட பிரச்சனையில் ஊரைவிட்டு போகிறேன் என்ற கமல் எதற்கு தற்போது அரசியல் பேசுகிறார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் 11ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூடம் சேலத்தில் நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது,

ரஜினி, கமல்
ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை வாயே திறக்காத ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் அவர் மறைந்த பிறகு அரசியல் பற்றி பேசுவது ஏன்? ரஜினியும், கமலும் தமிழக மக்களுக்காக எதுவும் செய்யாதவர்கள்.

முதல்வர்
அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு முதல்வராகும் தகுதி உள்ளது. ஒரு சிலருக்கே முதல்வர் பதவி தானாக கிடைக்கும். கடின உழைப்பால் தான் முதல்வராக முடியும்.

வேண்டப்பட்டவர்கள்
திரையுலகினர் யாரையும் பகைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ரஜினியும், கமலும் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள். கடவுள் ரஜினியிடம் பேசிவிட்டாரா என்று தெரியவில்லை.

கமல்
பட பிரச்சனையால் ஊரை விட்டு போவேன் என்று கூறிய கமல் தற்போது ட்விட்டர் மூலம் அரசியல் பேசுவது ஏன்?. ட்விட்டர் பதிவுகளை பார்த்துவிட்டு மக்கள் திசை திரும்பிவிடக் கூடாது.

தெளிவுரை
கமல் ஹாஸனின் ட்விட்டர் பதிவுகளுக்கு தெளிவுரை எழுத நான் தயார். தமிழகத்தில் பாஜவுக்கு அ, ஆ எழுதியவனே நான் தான். அரசியல் குறித்து யாருடனும் விவாதிக்க தயார் என்றார் சரத்குமார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications