ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.. இன்னும் பயிற்சி வேண்டுமோ.. சசிகலா புஷ்பாவின் சங்கடம்
சென்னை: திமுகவினரை தாக்கி பேசினால் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைத்து சசிகலா செய்யப்போன விஷயம் அவருக்கே எதிரானதாக முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
திமுகவின், திருச்சி சிவாவை, ஏர்போர்ட்டில் வைத்து தாக்கிய, அதிமுக எம்.பியாக இருந்த, சசிகலா புஷ்பாவை மறுநாளே போயஸ் கார்டனுக்கு வர வைத்து, முதல்வர் அட்வைஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன்பிறகு ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தன்னை அடித்ததாக கண்ணீர் விட்டு கதறினார். இதையடுத்து உடனடியாக அவர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பூமராங்
திமுகவினரை தாக்கி பேசினாலோ, தாக்கினாலோ அதிமுகவில் முக்கிய பதவி கிடைக்கும் என்ற கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்து சசிகலா புஷ்பா காய்நகர்த்தப்போய் அது ரிவர்ஸ்சாகி பூமராங் போல அவரையே தாக்கிவிட்டதாக கூறப்படுகிது.

சிதம்பரம் மீது தாக்கு
1991-96 காலகட்டங்களில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்தார். அந்த சூழ்நிலைியல் ஒருநாள், திருச்சி விமான நிலையத்தில் வைத்து, சிதம்பரத்தை, அப்போதைய பால் வள தலைவரான இளவரசன் தாக்க முயன்றார்.

இளவரசனுக்கு வளர்ச்சி
இந்த சம்பவத்திற்கு பிறகு, ஏனோ தெரியவில்லை, இளவரசன் அரசியல் வாழ்க்கையில் வளர்ச்சிதான். இளவரசனுக்கு எம்.பி., பதவி, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, மாநில பேரவை செயலர் பதவி, அரியலுார் மாவட்டச் செயலர் பதவி என, வரிசையாக தேடி வந்தன

கருணாநிதி மீது விமர்சனம்
பெரம்பலுார் எம்.பி.யாக இருந்த ராஜரத்தினம், 1998ல், சென்னையில் நடந்த ரயில்வே விழாவில் பங்கேற்றபோது, அதே விழாவில் பங்கேற்றிருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியை, நேருக்கு நேர் விமர்சித்து பரபரப்பை கிளப்பினார். அதன்பின், அவருக்கு கட்சியில் ஜெ., பேரவை மாநில செயலர், எம்.எல்.ஏ. என பதவிகள் தேடி வந்தன.

புவனேஸ்வரிக்கு மேயர் பதவி
கடந்த, 2006 - 11ல், முதல்வராக இருந்த கருணாநிதிக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகம் செய்து, கைதாகிய புவனேஸ்வரியை, நெல்லை மேயராக்கியதோடு, மாவட்ட மகளிர் அணியிலும் பொறுப்பு கொடுத்தார் ஜெயலலிதா.

எஸ்.எஸ்.சந்திரனுக்கும்
கருணாநிதியை கண்டபடி விமர்சனம் செய்து பெயர் வாங்கிய, மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரனுக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்பட்டது. நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு மகளிர் அணியில் பொறுப்பு, சமூக நலவாரிய பொறுப்பு, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, செய்தி தொடர்பாளர் என கட்சியிலும், ஆட்சியிலும், வரிசையாக பொறுப்புகள் அளிக்கப்பட்டன.

பலிக்காத தந்திரம்
இதையெல்லாம் பார்த்த சசிகலா புஷ்பா, சமீபகாலமாக தனக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் தராமல் புறக்கணிக்கப்பட்டு வருவதை உணர்ந்து, திருச்சி சிவாவை பகடைக்காயாய் பயன்படுத்தி, உயர் பதவி பெற திட்டமிட்டதாக கூறுகிறார்கள் ர.ரக்கள். ஆனால், ஜெயலலிதாவின் நிலைப்பாடு சமீபகாலமாக மாறியுள்ளதாகவும், இனிமேலும், வேலை பார்க்காமல், பிற கட்சிகளை திட்டிக்கொண்டே பதவி பெற முடியாது என்றும் ர.ரக்கள் பூரிப்போடு கூறுகிறார்களாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications