டிடிவி வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள்.. வெளியே ஓங்கி ஒலித்த மோடி எதிர்ப்பு கோஷம்!
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்கள் இட்டனர்.
Recommended Video
சென்னை: அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசார் வந்த நிலையில் அங்கு திரண்ட ஆதரவாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகள் உள்பட 190 இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் வருமான வரி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் இன்று காலையில் போலீசாருடன் வந்தார். இதானையடுத்து அங்கு திரண்டவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வருமான வரி சோதனை நடப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் வீட்டிற்கு வெளியே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். பழிவாங்கும் விதமாகவே வருமான வரி சோதனை நடப்பதாக தினகரன் வீட்டின் முன்பு திரண்ட ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.