‘பூ மழை தூவி... பருவமழையைக்கு வரவேற்பு’: கூடலூர் மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கூடலூர்: கூடலூரில் மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பருவமழையை மலர் தூவி மாணவர்கள் வரவேற்ற நிகழ்ச்சி அம்மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் நடத்தப்பட்டது.
கூடலூர் பகுதியில் ஆண்டு தோறும் ஜூன் முதல்வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி விடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு எதிர்பார்த்தது போல் சரிவர பருவமழை பெய்யவில்லை.
பருவமழை தாமதமானதற்குக் காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடே என்பதை மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் கூடலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும், பருவமழையை மாணவர்கள் மலர் தூவி வரவேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியரும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான ராபர்ட் தலைமை தாங்கினார். கூடலூர் நகரசபை தவைலர் ரமா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசி பருவ மழையை வரவேற்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மாணவ - மாணவிகள் புறப்பட்டு கூடலூர் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். அப்போது பருவமழையை வரவேற்கும் வகையில் மலர்களை தூவி சென்றனர்.
அனைத்து மாணவ- மாணவிகளும் கைகளில் குடைகளை பிடித்தவாறு சென்றனர். பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக சென்ற மாணவ- மாணவிகளின் ஊர்வலம் இறுதியாக கூடலூர் ஆர்.டி.ஒ. அலுவலகத்தை வந்தடைந்தது.
உறுதிமொழி:
பின்னர் சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்போம். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கூறி பள்ளி மாணவ- மாணவிகள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் மைய நிர்வாகி சிவதாஸ், போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் அருண், ராஜா மணி, ஏசுமரியான், கவுன்சிலர் தாமஸ், வாசுதேவன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications