நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க சீமான் வலியுறுத்தல்!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கோவை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்து நிரந்த விலக்கு அளிக்க வேண்டும். பாஜக ஆட்சியிலும் தமிழக மீனவர் பிரச்சனை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்யும் போது படகுகளையும் பறிமுதல் செய்கிறது. ஆனால் அந்த படகுகளை மீட்பதில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications