வல்லூர் அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் பழுது... 1000மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால், 1000மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய அனல்மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நிறுவப்பட்டுள்ளது வல்லூர் அனல்மின் நிலையம். இங்குள்ள 3 யூனிட்டுகளில் 500மெகா வாட் விகிதம் 1500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல் யூனிட்டில் கொதிகல குழாயில் கசிவு ஏற்பட்டது. அதன் காரணமாக 500மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி மூன்றாவது யூனிட்டில் கொதிகல குழாயில் ஏற்பட்ட கசிவால் மின் உற்பத்தி பழுது சிரி செய்யப்பட்டு நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.
ஆனால் டர்பன் குழாயில் நீர் கலந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த யூனிட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் இரண்டாவது யூனிட்டில் மட்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் 1000 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வட சென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப் படுகிறது. எனவே, இது தொடர்பாக முழு ஆய்வு செய்து தங்கு தடையின்றி மின் உற்பத்தி நடைபெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications