ஆண்டாள் விவகாரம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் நாளை முதல் போராட்டம்
ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி நாளை முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: கவிஞர் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக விமர்சனம் செய்ததாக கூறி அவர் மன்னிப்பு கேட்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து, ஆண்டாள் நாச்சியார் குறித்து பாராட்டத்தக்க கருத்துகளை பேசி வந்தார். அப்போது வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் அவரது நூலில் ஆண்டாள் குறித்து கூறியுள்ளதை வைரமுத்து மேற்கோள்காட்டினார்.

அந்த வார்த்தை ஆரம்ப காலத்தில் நல் அர்த்தத்தை கொடுப்பதாக இருந்த போதிலும் தற்போது அது தவறான அர்த்தத்ததை குறிக்கிறது. இதனால் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததன.
அவர் விளக்கம் கோரியும், வருத்தம் தெரிவித்தும் இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஏற்கெனவே வைரமுத்துவுக்கு கெடு விதித்து விட்டு உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில், ஜீயர் மறுபடியும் போராட்டத்தை தொடங்கி பிப்ரவரி 3-க்குள் வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
ஆனால் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை வைரமுத்து கோயிலுக்கு வரவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக ஜீயர் அறிவித்தார்.
இந்நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications