சென்னை கோபாலபுரத்தில் மாணவர்களின் பூணூல் அறுப்பு... பெற்றோர் வேதனை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீட்..அராஜகமாக நடத்தப்பட்ட சோதனைகள்-வீடியோ
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் மாணவர்களின் பூணூல் அறுக்கப்பட்டதால் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு தொடங்கியது. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு சிபிஎஸ்இ வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் கையில் கட்டியுள்ள சாமி கயிறுகளை பிளேடாலும், கத்திரிகோலாலும் அறுத்தெறிந்தனர். அதுபோல் மாணவிகள் அணிந்திருந்த துப்பட்டாவுக்கு அனுமதி இல்லை. இதனால் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் தேர்வு எழுத வந்த மாணவர்களை சோதனை செய்த போது அவர்களில் சிலர் பூணூல் அணிந்திருந்தனர். இதையடுத்து அவையும் அறுத்தெறியப்பட்டன.
இதனால் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர். மத்திய அரசு அராஜக போக்கையே கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications