வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்… சென்னையில் திடீரென கொட்டிய மழை…
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் காலை நேரத்தில் திடீர் என மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி வாகன ஓட்டிகளை சிரமத்திற்குள்ளாக்கியது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் நேற்று வெயிலடித்தாலும் குளுமையான காற்றே வீசியது. இன்று காலை நேரத்தில் வெயிலடித்தாலும் திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு கனமழை கொட்டியது. வெயிலை நம்பி துணிகளை துவைத்து காயப்போட்ட சென்னைவாசிகள் அவசரம் அவசரமாக ஓடிப்போய் துணிகளை எடுத்து வந்தனர்.
மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் கால்மணிநேரம் மட்டுமே பெய்தாலும் அடித்து ஊற்றிய மழையால் சாலைகளின் ஓரங்களில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே தமிழகம் மற்றும் புதுவையில் அவ்வப்போது மழையும், வெயிலுமாய் மாறி மாறி வானிலை காணப்படுகிறது.
இந்த மாதத்துடன் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும், ஜனவரியிலும் தொடரும் என, வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவிழந்தாலும், ஈரப்பதம் மிகுந்த காற்றால், தமிழகத்தில் ஆங்காங்கே, கடந்த ஒருவாரமாக மழை பெய்தது. சென்னையிலும், சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் மழை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில், மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில், மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் ரமணன் கூறியுள்ளார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications