தமிழக சட்டசபை 3 நாள் கூட்டம் முடிந்தது... தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டநிலையில், சட்டசபை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பேசினார். இன்றைய கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. உரிமை மீறல் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக இன்று நடந்த கூட்டத்தை தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

இதே போல் தே.மு.தி.க. உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேச அனுமதி அளிக்கவில்லை என்று கூறி தே.மு.தி.க. உறுப்பினர் நேற்று முதல் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்தார். இதை கண்டித்து அவர் வெளிநடப்பு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை அருகே உள்ள சோழவந்தான் குருவுத்துறை கிராமத்தில் தேவேந்திர குல மக்கள் மீது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். வீடுகளை தீவைத்து எரித்தனர். இது குறித்து காவல்துறை முகாந்திரம் இல்லாமல் 3 வழக்குகள் பதிவு செய்து உள்ளது.
குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் காவல் துறை செயல்படுகிறது. தலித் மக்கள் மீது மதுரை ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இது குறித்து கவன ஈர்ப்பு கொண்டு வந்து பேச கடிதம் கொடுத்து இருக்கிறேன்.
இன்றைய கூட்டத்தில் முதல்வர் சபையில் இருக்கும் போது இது பற்றி விவாதிக்க முற்பட்டேன். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதை கண்டித்து வெளிநடப்பு செய்து உள்ளேன் என்றார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதைத் தொடர்ந்து, சட்டசபை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications