தமிழக சட்டசபை 3 நாள் கூட்டம் முடிந்தது... தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டநிலையில், சட்டசபை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பேசினார். இன்றைய கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. உரிமை மீறல் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக இன்று நடந்த கூட்டத்தை தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

இதே போல் தே.மு.தி.க. உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேச அனுமதி அளிக்கவில்லை என்று கூறி தே.மு.தி.க. உறுப்பினர் நேற்று முதல் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்தார். இதை கண்டித்து அவர் வெளிநடப்பு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை அருகே உள்ள சோழவந்தான் குருவுத்துறை கிராமத்தில் தேவேந்திர குல மக்கள் மீது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். வீடுகளை தீவைத்து எரித்தனர். இது குறித்து காவல்துறை முகாந்திரம் இல்லாமல் 3 வழக்குகள் பதிவு செய்து உள்ளது.
குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் காவல் துறை செயல்படுகிறது. தலித் மக்கள் மீது மதுரை ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இது குறித்து கவன ஈர்ப்பு கொண்டு வந்து பேச கடிதம் கொடுத்து இருக்கிறேன்.
இன்றைய கூட்டத்தில் முதல்வர் சபையில் இருக்கும் போது இது பற்றி விவாதிக்க முற்பட்டேன். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதை கண்டித்து வெளிநடப்பு செய்து உள்ளேன் என்றார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதைத் தொடர்ந்து, சட்டசபை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications