கணினி அறிவியல் வேலையில்லா பட்டாதாரி ஆசிரியர்கள் - ஈரோடு நகரில் முதல் மாநாடு
Recommended Video

சென்னை: தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டாதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஜனவரி 7ம் தேதி ஈரோட்டில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மட்டும் அல்லாமல் அதை விட மேலான கல்வியை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்திடவும். கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்கவும். கணினி ஆசிரியர்கள் சார்பில் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2018 ஜனவரி 7ஆம் தேதியன்று ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மல்லிகை அரங்கில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோட்டில் மாநாடு
கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்கவும். கணினி ஆசிரியர்கள் சார்பில் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற உள்ளார்.

பள்ளிகளில் கணினி பாடம்
மாநிலம் முழுவதும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் கணினி அறிவியல் பாடத்திற்கு 2500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முதற்கட்டமாக அரசுப்பள்ளிகளில் 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்தார். ஆனால் அதன் பிறகு இப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்
இதன் காரணமாக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. எனவே இப்பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வரைவுப்பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி., வரையிலும் தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும்.

கணினி ஆய்வகங்கள்
இதன் மூலம் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, தலா ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்யவும், அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என்பதும் எங்களது நீண்டகால கோரிக்கை. இவற்றை வலியுறுத்தி வரும் 7ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அறிவிப்போம்.

ஈரோடு மாநாடு
மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளை பங்கேற்க செய்வது என்றும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பது குறித்தும் மாநாட்டில் முடிவு செய்யப்படும். இவ்வாறு மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications