ஆண்டுதோறும் அடித்து நொறுக்கும் டாஸ்மாக் வசூல்... போன வருஷம் ரூ. 26,188 கோடி வசூலாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில் நடைபெறும் மது வசூல் ஆண்டுதோறும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட் பட்ஜெட்டில் கடந்த 2014-15ம் ஆண்டில் டாஸ்மாக் வசூல் ரூ. 26,188 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2015-16ம் ஆண்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ. 29,627 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.
அதில் உள்ள சில சிறப்பு அம்சங்கள்:
| தமிழக அரசின் மொத்த வருவாய் | ரூ. 1,42,681. 33 |
| மூலதனச் செலவு | ரூ. 27,213 கோடி |
| வருவாய் பற்றாக்குறை | ரூ. 4,616 கோடி |
| சொந்த வரி வருவாய் | ரூ. 96, 083.74 கோடி |
| வரி விலக்கு மூலம் இழப்பு | ரூ. 650 கோடி |
| நிகரக்கடன் வரம்பு | ரூ 32, 990 கோடி |
| மாநிலத்தின் மொத்தக்கடன் சுமை | ரூ. 2,11,483 கோடி |
| டாஸ்மாக் மது விற்பனை மூலம் கடந்த 2014-15ல் கிடைத்த வருவாய் | ரூ. 26,188 கோடி |
| 015-16ல் டாஸ்மாக் மது விற்பனை இலக்கு | ரூ. 29,627 கோடி |
| நகர்ப்புற வாழ்வாதார திட்டத்திற்கு | ரூ.107 கோடி |
| வாழ்வாதார நிதி திட்டத்திற்கு | ரூ. 255.04 கோடியாக நிதி உயர்வு |
| பசுமை வீடுகள் கட்ட | ரூ. 1,260 கோடி |
| சென்னை மாநகர வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக | ரூ. 500 கோடி |
| மின்சார மானியம் வழங்கிட | ரூ.7,136 கோடி |
| மாணவ மாணவிகள் இலவச பஸ் பயணத்திற்கு | ரூ. 480 கோடி |
| தமிழகத்தில் நதி நீர் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்த | ரூ. 253 கோடி |
| ரேஷன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட திட்ட உணவு மானியத்திற்கு | ரூ.5,300 கோடி |
| விலையில்லா கறவைப் பசு மற்றும் வெள்ளாடுகள் திட்டத்தின் கீழ் | 12,000 கறவை பசு, 6 லட்சம் வெள்ளாடுகள் |
| விலையில்லா கறவை மாடுகள் வெள்ளாடுகள் வழங்க | ரூ.241. 90 கோடி |
| தேங்கிக் கிடக்கும் வழக்குகளை பைசல் செய்ய தமிழகத்தில் புதிதாக 169 நீதிமன்றங்கள் | |
| அம்மா உணவகம், அம்மா சிமென்ட், அம்மா உப்பு திட்டம் தொடரும் | |
| சென்னையைப் போல, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் | |
| மத்திய அரசின் தூய்மை இந்தியாத் திட்டத்திற்கு மாநில அரசின் சார்பில் | ரூ. 350 கோடி நிதி |












Click it and Unblock the Notifications