நாமக்கலில் 156 பார்களுக்கு ஒரே நேரத்தில் சீல் வைப்பு... புத்தாண்டு அதுவுமா 'குடி'மகன்களுக்கு ஷாக்!
நாமக்கலில் ஒரே நேரத்தில் 156 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் : நாமக்கலில் பார் ஒப்பந்தத்தை உரிமையாளர்கள் புறக்கணித்த நிலையில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக 156 பார்களுக்கு பூட்டி சீல் வைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 201 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 165 டாஸ்மாக்குகளில் பார் வசதியுடன் இயங்கி வருகின்றன. டெண்டர் முறையில் பார்கள் வைத்துக் கொள்ள உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. டெண்டர் காலம் நேற்றோடு முடியும் நிலையில் கடந்த வாரத்தில் இதற்கான ஏல தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த டெண்டரை பார் உரிமையாளர்கள் புறக்கணித்ததாக தெரிகிறது. மாதாந்திர வரியுடன் 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டதால் உரிமையாளர்கள் டெண்டரை புறக்கணித்தனர். இதனையடுத்து டெண்டர் காலமும் நேற்றோடு முடிந்த நிலையில் அதிகாரிகள் இன்று சுமார் 165 பார்களுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
ஒரே நேரத்தில் 165 பார்களையும் அதிகாரிகள் மூடியுள்ளனர். டெண்டரில் ஏலம் எடுக்கப்பட்ட 9 பார்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 12 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி செலுத்த முடியாது என்று பார் உரிமையாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், இதனை பரிசீலிக்க முடியாது என்று டாஸ்மாக் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால், பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பாருக்கு வர முடியாமல் குடிமகன்கள் கவலையடைந்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications